கதகதப்பு அரவணைக்கும், வெக்கை சுட்டெரிக்கும்

பாதுகாப்பான ஒரு போர்வை
அதன் உள்ளே ஒழுகி ஊத்தும் வியர்வை
வெளியே குளிர் வாட்டுமாம்,
அங்குள்ள எல்லாமே தீட்டாம்
இருக்கட்டும் பரவாயில்லை
ஆசைப்பட்டு உள்ளேயே வெந்து நொந்து வாழும் ஒரு வாழ்க்கை
அது புரிகிறது
ஆனால்,
வெளியே போகும் ஒரு வழிப்போக்கனைக் கண்டாலும்
கொதிக்கும் எண்ணெய்யில் பொ
ரிக்கப்போட்ட கோழியாய்
கொப்பளிக்க வேண்டிய அந்தத் தேவை
அது புரிபடவில்லை

Comments

  1. சிறந்த முயற்சி; சில ௭ழுத்துப் பிழைகள் பரவாயில்லை. ௭ண்ண ஓட்டமும் கருத்தும் புதிது.

    ReplyDelete
    Replies
    1. Thank you. Bit embarrassed about the spelling errors. My Tamil writing is a bit rusty and I'm not used to typing in keyboard either. I have tried to fix them and have updated.

      Delete

Post a Comment